திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. இதில், தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மண்டல பூஜைக்கு பக்தர்களை அனுமதிக்கும் திட்டத்தை வெள்ளோட்டமாக, ஐப்பசி பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஐப்பசி பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள், பம்பையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திரிவேணி பகுதியில் அவர்கள் குளிப்பதற்காக ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான தண்ணீர், லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.