திருச்சி: திருச்சியில் 4 பெண்களை திருமணம் செய்த ஆயுதப்படை காவலரின் மகன் கைது செய்யப்பட்டார். ஆயுதப்படை காவலர் மகாலிங்கத்தின் மகன் கார்த்தியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த ஆண்டு சுமதி என்பவரை காதலித்து கார்த்தி திருமணம் செய்திருந்தார். கணவன் கார்த்தி நடத்தையில் சந்தேகப்பட்டு செல்போனை பார்த்தபோது 3 பெண்களுடன் திருமணமானது அம்பலமானது.