×

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வார் : அமைச்சர் கருப்பணன் பேட்டி

ஈரோடு,: வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவியில் அமர்வார் என அமைச்சர் கருப்பணன் கூறினார்.ஈரோட்டில் அமைச்சர் கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சிறப்பான முறையில் பணியாற்றியதன் பலனாக நோய் பரவல் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

அ.தி.மு.க.வில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் நேர்மையும், திறமையும் கொண்டவர்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக அனைவரின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியில் அமர்வார்.இவ்வாறு கருப்பணன் கூறினார்.

Tags : Edappadi Palanisamy ,Karuppanan ,interview ,
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...