சென்னை: வடக்கு அந்தமான் கடலில் அக்டோபர் 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தெற்கு அந்தமான் மற்றும் மத்திய வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது. தற்போது வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.