×

3 ஆண்டுகளை கடந்த நிலையில் பயன்பாடு இன்றி மண்புழு தயாரிப்பு கூடம் மக்கி வீணாகும் அவலம்

நெய்வேலி :  நெய்வேலி அருகே 3 ஆண்டுகளை கடந்த நிலையில், பயன்பாடு இன்றி மண்புழு தயாரிப்பு கூடம் மக்கி வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.   நெய்வேலி அடுத்த தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து மண் புழு தயாரிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2017- 2018 ன் கீழ், ரூ.1 லட்சம் மதிப்பில் மண்புழு தயாரிக்கும் கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த மண்புழு தயாரிப்பு கூடம் கட்டப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் கடத்தும் இதுநாள் வரையில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், மக்கி வீணாகி வருகிறது.

 கொட்டகையைச் சுற்றியும் புதர் மண்டி கிடப்பதாலும், கழி மற்றும் தென்னை கீற்றுகள் மக்கி விஷப் பூச்சிகளின் உறைவிடமாக மாறியுள்ளது. உரக்கிடங்கினுள் கட்டப்பட்டுள்ள தொட்டிகள் கொசு உற்பத்தி கூடமாக மாறியுள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. மேலும் மக்கள் வரிப்பணம் ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மண்புழு தயாரிப்புக் கூடத்தை செயல்படுத்த ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : earthworm production hall , Neyveli,Earthworm, people
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.