சென்னை: புவனகிரியில் ஊராட்சி மன்றத் தலைவியை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து துணைத் தலைவர் அவமதித்தார். தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்தரமாக செயல்படுவது குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.