×

புதுச்சேரியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. திப்புராயப்பேட்டையில் திப்லான் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடைய தவீத் என்பவர் உள்பட 7 பேர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரில் சௌந்தர், கௌசிக் ஆகிய 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


Tags : Pondicherry , Puducherry, murder, arrest, 2 persons, corona infection
× RELATED கருங்கல் பகுதியில் தொடர் பைக்...