×

கோபியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தி சிறை வைக்கப்பட்ட பெண் மீட்பு

கோபி: கோபியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தி சிறை வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டார். நைனாம்பாளையத்தில் சவுந்திரநாயகி பெற்றோர் எதிர்ப்பை மீறி அசோக் என்பவரை காதல் திருமணம் செய்தார். சவுந்திரநாயகி குடும்பத்தினர் காதல் தம்பதியை தந்திரமாக விருந்துக்கு அழைத்தனர். நண்பர்கள் புடை சூழ காதல் மனைவியுடன் சென்ற அசோக்குக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சவுந்தரநாயகியை அறையில் பூட்டிவிட்டு அசோக் மற்றும் நண்பர்கள் மீது 10 பேர் கும்பல் தாக்கி விரட்டியது. காதல் பட பாணியில் நடந்த இந்த சம்பவம் குறித்து கோபி போலீசில் அசோக் புகாரளித்தார். ஒரு வார தேடலுக்கு பிறகு சவுந்தரநாயகியை கோபியில் போலீசார் மீட்டனர். கடத்தல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அசோக் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.

Tags : Kobe , Kopi, love marriage, female redemption
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்