×

மத்திய அரசு மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: புதுவை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி:  புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:மாநிலங்களில் வரி வசூலிக்கும் உரிமையை ஜி.எஸ்.டி. என்ற பெயரில் எடுத்துக்கொண்டது. தற்போது, வேளாண் திருத்த மசோதாவை கொண்டு  விவசாயத்தையும் பறித்து கொண்டனர். இதனை முன்வைத்தே மாநிலத்தில் அதிகாரத்தை ஒவ்வொன்றாக பறித்து தமிழ்நாட்டோடு-புதுச்சேரியை  இணைக்க முயற்சிப்பதாக தெரிவித்தேன்.

ஆனால் நான் தேச விரோத கருத்துகளை கூறிவிட்டதாக ஊர்வலம் போகிறார்கள். சிபிஐ, வருமான  வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து எல்லோரையும் மிரட்டுகிறார்கள். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படுபவன் இல்லை. இவ்வாறு அவர்  கூறினார்.

Tags : Narayanasamy ,Central Government , Federal government will not be afraid of intimidation: New Chief Minister Narayanasamy is obsessed
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை