புதுச்சேரி: புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:மாநிலங்களில் வரி வசூலிக்கும் உரிமையை ஜி.எஸ்.டி. என்ற பெயரில் எடுத்துக்கொண்டது. தற்போது, வேளாண் திருத்த மசோதாவை கொண்டு விவசாயத்தையும் பறித்து கொண்டனர். இதனை முன்வைத்தே மாநிலத்தில் அதிகாரத்தை ஒவ்வொன்றாக பறித்து தமிழ்நாட்டோடு-புதுச்சேரியை இணைக்க முயற்சிப்பதாக தெரிவித்தேன்.
ஆனால் நான் தேச விரோத கருத்துகளை கூறிவிட்டதாக ஊர்வலம் போகிறார்கள். சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து எல்லோரையும் மிரட்டுகிறார்கள். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படுபவன் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.