×

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் கல்லால் அடித்து மனைவி கொலை கணவன் தூக்குபோட்டு தற்கொலை: செம்மஞ்சேரியில் பரபரப்பு

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நாராயணன் (70). இவரது மனைவி மனோன்மணி (48). இவர்களுக்கு திருமணமாகி 25  வருடங்கள் ஆகிறது. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் நாராயணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால்,  தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாராயணன், வீட்டின் வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து கதவை உள்பக்கமாக மூடினார். பின்னர் மனைவி தலையில்  கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார்.

பின்னர் பயத்தில், மின் விசிறியில் தூக்கு போட்டு நாராயணன் தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வந்து  பார்த்தபோது, இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி  ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : misconduct Husband ,suicide ,death , Disorder caused by suspicion in behavior Husband commits suicide by stoning wife to death
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை