பெரம்பூர்: திண்டுக்கல் மாவட்டம் குறும்பப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2019ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான வாலிபரை, போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவித்தது.
எனவே, சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முடி திருத்தும் கடைகளை மூடி சவர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, வியாசர்பாடி அன்னை இந்திரா நகரில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.