சென்னை: திருவேற்காட்டில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருவேற்காட்டில் ஆதிதிராவிடர் உழைக்கும் மகளிர் நல விடுதியை விரைவில் முதல்வர் திறந்து வைப்பார். அதேபோல் மினி ஸ்டேடியம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தான் நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.