சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் 30 நாள் பரோலில் சொந்த ஊர் சென்றார்.பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாய் அற்புதம்மாள் வழக்கு தொடுத்திருந்தார். சில நாட்களுக்கு முன் பேரறிவாளனுக்கு 30நாள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அதன் நீதிமன்ற நகல் நேற்று காலை புழல் தண்டனை சிறைப் பிரிவுக்கு வந்தது.
நேற்று காலை 10 மணியளவில் பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, அவரை வேனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன். அதன் பின்னர், நேற்று மாலை பேரறிவாளன், அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.