×

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம்  அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 22ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வழக்கமான உடல்  பரிசோதனையை மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த  செப்டம்பர் 24ம் தேதி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும், 28ம் தேதி அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு தொற்று ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் மறுபடியும் கடந்த 6ம் தேதி இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து மூன்று நாட்கள் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார்.  

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:விஜயகாந்த் மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல  முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் நேற்று சென்னை மியாட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவ்வாறு அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.



Tags : Vijaykanth ,home ,hospital , From the hospital Vijaykanth returned home
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு