×

கத்தியை காட்டி வழிப்பறி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில் தேனி  மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில்(24). திருத்தணி பகுதியை சேர்ந்த செல்வம்(25) ஆகிய இருவரும் ஓட்டுனராக பயின்று வருகின்றனர். இந்நிலையில், இருவரும் நேற்று பஜார் பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது,  கன்னியம்மன் மேம்பாலம் அருகே 24 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை  பிடித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை விசாரணை செய்ததில் பொன்னேரி பகுதியை சேர்ந்த  ரபிக்(25) என தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Grab the knife and snatch
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்