சென்னை: உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஹால் டிக்ெகட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு வருகிற 17, 18ம் ஆகிய தேதிகளில் (முற்பகல், பிற்பகல்) சென்னையில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net/ www.tnpscexams.inல் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை எழுத்து தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பம் நிராகரிப்பட்டதெனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.