×

‘சட்ட மாணவர்கள் சேர்க்கை தேர்வுக்கு தடை கிடையாது’

புதுடெல்லி: நாடு முழுவதும் 23 சட்டப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மாணவர் சேர்க்கைக்காக, தேசிய அளவில் ‘கிளாட்’ என்ற பெயரில்  பொது தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இது, கடந்த மாதம் 28ம் தேதி ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இது முறையாக நடத்தப்படவில்லை,  கேள்விகள் தவறுதலாக கேட்கப்பட்டு இருந்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 எனவே, இத்தேர்வுக்கு தடை விதிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் 5  மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதை நேற்று விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் அமர்வு, தேர்வுக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி  செய்தது. அதே நேரம், முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான குறைதீர்ப்பு மையத்தில் 2 நாளில் தங்கள் குறைகளை முறையிடும்படி  மாணவர்களுக்கு அனுமதி வழங்கியது.



Tags : Law students , ‘Law students For admission examination There is no ban '
× RELATED குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து...