பின்லாந்து : சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஒரு 16 வயது சிறுமி ஒரு நாள் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வன் என்னும் தமிழ்ப்படத்தில் கதாநாயகன் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகப் பதவி வகித்தது கற்பனைக் கதை ஆகும். ஆனால் நிஜத்தில் ஒரு சிறுமி பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில் அவர் ஒருபடி மேலே போய் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 16 வயதான ஆவா முர்டோ என்னும் அந்த சிறுமிக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் இல்லாமல் பதவி வகித்துள்ளார்.அவர் அந்த ஒரே நாளில் தொழில் நுட்பத்தில் பெண்கள் உரிமைகளை முன்னிலைப்படுத்தப் பல அரசியல்வாதிகளை சந்தித்துள்ளார்.