கனிமவள கொள்ளையை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனிமவள கொள்ளையை தடுக்கக்கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த அறிக்கையை நவம்பர் 9ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.