×

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அகில இந்திய பா.ஜ. தலைமை முடிவு எடுக்கும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்செந்தூர், :முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் அளித்த பேட்டி: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே பேரிழப்பாகும். 26 வயதிலேயே அரசியலில் நுழைந்து கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தேர்தல்களில் பீகாரில் ஒரே தொகுதியில் வென்ற செயல் வீரர் ஆவார்.

திமுகவுடன் கூட்டணி அமையும் என்று தொனிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளீர்களே என்று கேட்கிறீர்கள். என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி அப்படிப்பட்டது. அதனால் அப்படி பதிலளித்தேன். அதற்கு முன்னர் கேட்ட கேள்விக்கு நான் திமுகவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தேன். அப்படியிருக்க திமுகவுடன் கூட்டணி அமையும் என்று கூறுவேனா? அதையும் பிரசுரித்திருந்தால்... இந்த சந்தேகம் வந்திருக்காது.

தற்போது அதிமுகவுடனான கூட்டணியில் நீடிக்கிறோம். சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அகில இந்திய பா.ஜ. தலைமை முடிவு எடுக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் பா.ஜ. ஆட்சியமைக்கும்.

Tags : BJP ,India ,Assembly ,Pon.Radhakrishnan , Assembly Election, Coalition, Pon.Radhakrishnan
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்