×

காதலை மறக்க தியானம் செய்யும் போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது : போரூர் அருகே பரபரப்பு

பூந்தமல்லி, :போரூர் அருகே காதலை மறக்க தனியறையில் தியானம் செய்யும்போது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.போரூர் அருகே அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சந்திரமவுலி (50). இவர், அப்பகுதி கோயில்களில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர்மீது பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று 19 வயதான இளம்பெண் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த நான், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்தேன். அந்த காதலை மறக்க தியானம் செய்ய வேண்டும் என அர்ச்சகர் சந்திரமவுலி கூறினார்.

இதையடுத்து அவரது வீட்டின் தனியறையில் நான் தியானத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது எனது உடைகளை களைந்து, என்னிடம் அர்ச்சகர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அவரை கைது செய்ய வேண்டும் என அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின்பேரில் பெண் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயில் அர்ச்சகர் சந்திரமவுலியை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதால், அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Priest ,riot ,Porur , Meditation, little girl, sex, harassment
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...