விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காவலர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சர்வர் இயங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் குளறுபடி இருப்பதாகவும், சர்வர் இயங்கவில்லை எனவும் விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காவலர் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அக்டோபர் 26ம் தேதி வரை அவகாசம் உள்ளது.