திருப்பூர்: திருப்பூர் அமராவதி அணை நீர் ஆதாரமான பாம்பாற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை பரிதாபமாக மரணமடைந்தது. தாயுடன் ஆற்றை கடந்த குட்டி யானை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. தகவலறிந்து வந்த கேரள வனத்துறையினர் யானையின் உடலை கயிறுகட்டி மீட்டு வனத்துறை முறைப்படி, வனப்பகுதியில் தகனம் செய்தனர்.