சென்னை: தலைமை செயலகத்தில் அனைத்து அலுவலகங்களும் நாளை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாதத்தின் 2வது சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.