சென்னை: உண்மையில் விஷ்ணுவிஷால் ஸ்டூடியோஸ்க்கு சூரிதான் ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்ப தர வேண்டும் என விஷ்ணு தெரிவித்துள்ளார். நடிகர் சூரி புகாரின் பேரில் தந்தை ரமேஷ் குடவாலா மீது வழக்கு பதிவான நிலையில் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். கவரிமான் பரம்பரை படத்துக்காக 2017ல் நடிகர் சூரிக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.