மதுரை: தொல்லியல் பட்டயபடிப்பில் சேருவதற்கான தகுதியில் தமிழ்மொழியை தவிர்த்த அதிகாரி யார்? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்மொழியை தவிர்த்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.