கரூர்: கரூர் - ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தண்ணீரை திறந்து வைத்தார். நீர் திறப்பின் மூலம் கரூர் மற்றும் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 19,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இன்று முதல் 20 நாட்களுக்கு ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து 224.64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.