ஈரோடு: 2021 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர் என்று கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளரை அறிவித்ததில் எந்த சிக்கலும் இல்லை என ஈரோட்டில் அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் நேர்மையும், திறமையானவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் குறிப்பிட்டார்.