சென்னை: மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ்மொழி இணைப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளார். தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்க செய்யும் அநீதிக்கு முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார். சமஸ்கிருதம் அல்லாத பிற செம்மொழிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்க தமிழகமே உரத்து குரல் கொடுத்தது. இந்திய பண்பாட்டினை ஆய்வு செய்ய அமைத்த குழுவினை கலைக்க விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.