திண்டுக்கல் : திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சலூன் கடைகளை அடைத்து முடித்திருத்துவோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட முடி திருத்துவோரின் மகளுக்கு நீதி கோரி சலூன் கடைகள் மூடப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 2லட்சத்திற்கும் மேலான கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.