×

கூட்டணி பற்றி பாஜவில் ஆளாளுக்கு கருத்து சொல்வதா?: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: பாஜ திமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது அவரது கருத்தா அல்லது பாஜ கட்சியின் கருத்தா என்று கட்சி மேலிடம்தான் சொல்ல வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் அறிவித்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும். இப்போது நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. அது கட்சியின் கொள்கை முடிவு. பாஜவில் ஆளாளுக்கு சொல்லும் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது.

அகில இந்திய ரீதியில் பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் முழுமையாக எல்லாவித பிரதிநிதித்துவம் கொடுத்தது அதிமுகதான். எனவே, கட்சியில் நிறைய குழுக்கள் இருக்கிறது. தேர்தலையொட்டி கட்சி சார்பில் பல குழுக்கள் போடப்பட உள்ளது. பணிக்குழு, பிரசார குழு, ஆட்சி மன்ற குழு உள்பட நிறைய குழுக்கள் இருக்கிறது. அதில் பெண்களுக்கு அதிமுக சார்பில் உரிமை கொடுக்கப்படும். பெண்களையே மாவட்ட செயலாளராக போட்டு அழகு பார்த்ததும் ஜெயலலிதாதான். நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பெண்களை போட்டது அதிமுகதான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : anyone ,Jayakumar Kattam ,alliance ,BJP , BJP , Minister Jayakumar, Kattam
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: அசுர...