பெங்களூரு: ISIS அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக பெங்களூருவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த அஹமத் அப்துல் மற்றும் பெங்களூருவை சேர்ந்த இர்ஃபான் நசீர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல் அஹமத் பொருளாதார விமர்சகராக சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் பெங்களூருவில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.