மதுரை: பேரையூரில் விசாரணைக்கு சென்று உயிரிழந்த இளைஞர் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இளைஞர் ரமேஷின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. சட்டவிரோத காவல் மரணம் என புகாரளித்த நிலையில் உடற்கூராய்வை ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.