சென்னை: கட்டுமான பணி நிறைவு சான்று இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்படாது என்ற ஆணையை நீக்கியது ஏன்? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மின்இணைப்பு தொடர்பான ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டியதன் அவசியம் என்ன?. விதியை நீக்கினால் அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை? என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.