×

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கத்திக்குத்து; குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்: ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கத்துகுத்து விழுந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியில் ஈடுபட்ட முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடுகுப்பம் ஊராட்சி ஆர்.பி.கண்டிகை கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம்-புண்ணியகோடி ஆகியோர் குடும்பத்தினர் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கண்ணாயிரம், மகன் அப்பு (எ) ஓம்குமார் (25) உள்ளிட்ட 5 பேர் கூட்டளிகளுடன் புண்ணியகோடி வீட்டில் புகுந்து புண்ணியகோடி, அவரது மகன் பார்த்திபன் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேரை கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில்பேரில் ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்தர்குமார் வழக்கு பதிவு செய்தார். ஆனாலும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்.கே.பேட்டை காவல் நிலையம் அருகில் சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று  சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : road ,blockade ,arrest ,RKpet , Screaming for 4 people in the same family; Public road blockade demanding arrest of criminals: Riot near RKpet
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...