×

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை அடுத்த வெங்கடாரம் காலனியை சேர்ந்த ரவி கூலி தொழிலாளி. அவரது மகள் யுவராணி (22) என்பவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஆவதம் கிராமத்தை சேர்ந்த தினேஷ்பாபு (26) என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அவரது கணவர் அடிக்கடி வந்து மனைவியை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், 4 மாதம் கர்ப்பிணியாக உள்ள யுவராணி நேற்று மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். புகாரின்பேரில் பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கைன்றனர். திருமணமான 8 மாதமே ஆனதால் ஆர்.டி.ஓ விசாரனைக்கு உத்தரவிட பட்டுள்ளது.



Tags : suicide , Pregnant woman commits suicide by hanging
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை