×

கொரோனா பாதித்த மனநலம் குன்றியவர்கள் குணமடைந்தனர்

சென்னை: சென்னை, ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 20 ஆயிரத்து, 635 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, 18 ஆயிரத்து 718 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், ‘பான்யான்’ மனநல தன்னார்வ காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட 7 மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.அவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையை தொடர்ந்து ஏழு பேரும் குணமடைந்து காப்பகத்திற்கு நேற்று திரும்பினர்.  

இவர்களுக்கு, மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, ஒருங்கிணைப்பு அதிகாரி, ரமேஷ், டாக்டர்கள், புஷ்பா, பிரியா சுபாஷினி, மதிவாணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

Tags : Mentally ill people with corona were cured
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...