×

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நகர்கோவில்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாகர்கோவிலில் அவர் நேற்று அளித்த பேட்டி: கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்க வேண்டிய விஷயம். தற்போது அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். எல்லா கட்சிகளும் தங்களுடைய தலைமையில் கூட்டணி அமைவதை விரும்புவார்கள்.  
தேர்தல் நெருங்கி வரும்போது சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைப்பார்கள்.

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாஜவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி அமையும். அது அதிமுகவாக இருக்கலாம், திமுகவாக இருக்கலாம். இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத கட்சிகளுடனான ஆட்சியாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : alliance ,elections ,Assembly ,Pon.Radhakrishnan , Opportunity to change the alliance in the Assembly elections: Interview with Pon.Radhakrishnan
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...