×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 34 பேர் பலி: மொத்தம் 6,086 பேர் பலி.!!!

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் இன்று மட்டும் (07 அக்டோபர் 2020) கொரோனாவால் 5,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 66 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5,120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சத்து 34 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 49,513 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  6 லட்சத்து 78 ஆயிரத்து 828 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,086 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,Andhra Pradesh , Corona kills 34 in Andhra Pradesh in last 24 hours: Total 6,086 killed !!!
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி