×

‘வாழும் எம்ஜிஆர் எடப்பாடி’’ குடந்தையில் போஸ்டர் பரபரப்பு

பாபநாசம்:தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவு இணைச் செயலாளருமான மட்டியூர் வி.மகேந்திரன் அப்பகுதியில் வருங்கால முதல்வர் பற்றி  போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில்,  சும்மா இருங்க, விவசாயிகளின் விடி வெள்ளி, எங்கள் தங்கம் எடப்பாடியார் தான் வாழும் எம்ஜிஆர், 2021லும் அவர் தான் முதல்வர் என அச்சிடப்பட்டிருந்தது.

சும்மா இருங்க என்ற வரிகள்  ஓ.பன்னீர் செல்வத்தை சும்மா இருக்கச் சொல்வது போன்றும்,  எடப்பாடி தான்  முதல்வர் வேட்பாளர் என்பது போல் அச்சிட்டுள்ளார். இந்த போஸ்டர் கும்பகோணம் மட்டுமின்றி பாபநாசத்திலும் ஒட்டப் பட்டுள்ளதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Kuttanad , Actor, Sushant Singh, Suicide, Mumbai Police, Politicians, Media...
× RELATED மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்க...