×

இது என்னய்யா ‘கொரோனா’ முத்திரை?... தோல் கருப்பாகி வீங்கி ‘செப்டிக்’ ஆனது : மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி

புதுடெல்லி, :காங்கிரஸ் மூத்த தலைவர் மதுகவுர் யக்ஷிக்கு டெல்லி விமான நிலையத்தில் குத்தப்பட்ட கொரோனா அடையாள முத்திரையால், அவரது கையின் தோல் கருப்பாகி, வீங்கி செப்டிக் ஆகியுள்ளது. இதுதொடர்பாக, அவர் விமான போக்குவரத்து அமைச்சருக்கு கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் பயணிகளின் உடல் ெவப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் கைகளில் அடையாள முத்திரை குத்தப்படுகிறது. இந்த நடைமுறை அனைத்து விமான நிலையங்களிலும் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் ஐதராபாத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மதுகவுர் யக்ஷிக்கும் முத்திரை குத்தி உள்ளனர். அந்த முத்திரையானது அடுத்த சில நாட்களில் தோல் ‘செப்டிக்’ ஆனதால், அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்ைச பெறவேண்டியதானது. இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனது தோலில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு டுவிட் செய்துள்ளார். அதில், ‘அன்புள்ள ஹர்தீப் சிங் பூரி, டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை முத்திரையிடுகின்றனர்.

அவர்கள் பயன்படுத்தும் ரசாயனம் குறித்த விபரங்களை நான் பெற முடியுமா? டெல்லி விமான நிலையத்தில் எனக்கு முத்திரை குத்தப்பட்டது. இப்போது பாருங்கள் என் கை எப்படி இருக்கிறது ?’ என்று தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம், பார்ப்போரை அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தது. மேலும், முத்திரையின் காரணமாக, அவரது தோல் கருப்பு நிறமாகவும், லேசான வீக்கமும், தோல் செப்டிக் ஆகி இருப்பதையும் காணமுடிகிறது. காங்கிரஸ் தலைவர் இந்த டுவிட்டருக்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘இது தொடர்பாக எனது கவனத்தை ஈர்த்ததற்கு நன்றி. இப்பிரச்னை குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் சிஎம்டியுடன் பேசியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.



Tags : Corona ,label , Corona, leather, blackened, septic, senior leader of Congress, question
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...