சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில் வருகின்ற நவம்பர் 19ம் தேதிக்குள் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.