×

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்:   திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டது.   சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை  அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம்-கர்நாடகம் இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில்  நேற்று கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இருந்து பேப்பர் பாரம் ஏற்றிய லாரி சிவகாசி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக  சென்றுகொண்டிருந்தது. லாரி நேற்று மதியம் 1 மணியளவில் திம்பம் மலைப்பாதை 26வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது டயர் வெடித்து  நகர முடியாமல் நின்றது.

இதன் காரணமாக மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இது குறித்து  தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். ‘பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி நகர்த்தும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில்  போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Truck repair on Thimphu Hill Trail 3 hours of traffic damage
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...