டெல்லி: போராட்டம் நடத்துவதற்கு காலவரையின்றி பொது இடத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று டெல்லி ஷாஹீன்பாக்கில் நடந்த தொடர் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜனநாயகமும் அதிருப்தியும் இணைந்தே இருக்கும் என்ற போதிலும் குறிப்பிட்ட இடங்களில் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.