×

உலகின் மிக உயரமான, நீளமான அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்த 72 மணி நேரத்தில் 3 விபத்துகள்!!

சிம்லா : உலகின் மிக உயரமான, நீளமான அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை பிரதமர் திறந்து வைத்த 72 மணி நேரத்தில் 3 விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் ரோதங் கணவாய் கீழே, மணாலி-லே தேசிய நெடுஞ்சாலையில் 9.02 கிமீ தூரத்திற்கு அடல் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இது, மலைகளின் மீது 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உலகில் மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகவும் நீளமான சுரங்கப்பாதை என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ரூ.3,300 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 3ம் தேதி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சுரங்கப்பாதையின் மூலம் மணாலி-லே இடையே 46 கிமீ தூரம் குறைந்து, 4-5 மணி நேர பயண நேரமும் குறைகிறது. வாஜ்பாய் நினைவாக இந்த சுரங்கத்துக்கு அடல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடல் சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள்ளாக மூன்று விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பார்டர் ரோடு ஆர்கனைசேசன் தலைமை பொறியாளர் புருஷோத்தமன் கூறுகையில், சுரங்கப் பாதையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து அக்டோபர் 3-ம் தேதி உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தற்போது மூன்று விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம்.

ஒரு சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை சாலை நடுப்பகுதியில் நிறுத்தி செல்ஃபி எடுத்துள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் சுரங்கப் பாதை இரு வழி பாதையாக இருப்பதால் முந்தி செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் எளிதில் தீப்பற்றக்கூடியதான பெட்ரோல் சிலிண்டர் ஏற்றிச் செல்லும் லாரிகள் இப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சுரங்கப்பாதை பாராமரிப்பு பணிக்காக தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மூடப்படும்,என்றார்.

Tags : accidents ,Modi ,world ,highway tunnel ,Atal , World, Atal Highway, Tunnel, Prime Minister Modi
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...