×

விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : தேமுதிக அறிவிப்பு!!

சென்னை: விஜயகாந்த் நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 22ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனையை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தநிலையில் 28ம் தேதி அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு தொற்று ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருவரும் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 2ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தநிலையில், விஜயகாந்த் நேற்று இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிற்கு பிந்தைய உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “ தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 அம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vijaykanth ,announcement ,Temujin , Vijayakant, physical condition, vain rumor, do not believe, Demuthika, announcement
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...