×

கொரோனா தொற்றால் உதவி ஆய்வாளர் பலி

அண்ணாநகர்: சென்னை தலைமை செயலக காலனி காவலர் குடியிருப்பு காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்த பாபு (57), கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். இவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருந்ததால், கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 24ம் தேதி இவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமாக பரவியதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கடந்த 3ம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நேரில் வந்து  மலர் அஞ்சலி மற்றும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags : Corona ,assistant inspector , Corona infection kills assistant inspector
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...