×

தனியார் நிறுவனத்தில் புகுந்து பெண் ஊழியரை கதற, கதற கத்தியால் குத்திய கணவன்: சமூக வலைதளங்களில் பகீர் காட்சிகள்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் விவாகரத்து நோட்டீஸ் வழங்கிய மனைவியை, அவர் வேலை செய்து வந்த நிறுவனத்துக்குள் புகுந்து சரமாரியாக கணவன் கத்தியால் குத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் தோவாளை திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் பெருமாள் (32). இவரது மனைவி ஜோஷி (30). 2 குழந்தைகள் உள்ளனர். ஜோஷி நாகர்கோவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
குடும்ப தகராறு காரணமாக தம்பதியர் பிரிந்து வாழ்கிறார்கள். கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது நேற்று முன்தினம் மாலையில் சதீஷ் பெருமாளுக்கு கிடைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ஜோஷி வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று தகராறு செய்தார்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோஷியை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் தப்பி ஓடிய சதீஷ் பெருமாளை பிடிக்க முயன்றனர். அப்போது ஒரு ஊழியருக்கும் கத்திக்குத்து விழுந்தது. மற்ற ஊழியர்கள் அவரை விரட்டி பிடித்து, வடசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஜோஷி மீட்கப்பட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, சதீஷ் பெருமாளை கைது செய்தனர். இதற்கிடையே சதீஷ் பெருமாள் நிறுவனத்துக்குள் புகுந்து மனைவியை கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கணவரின் கொலை வெறி தாக்குதலில் சிக்கி, ஜோஷி கதறும் காட்சிகள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.


Tags : company , Husband stabs female employee in private company
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...