×

தொழிலதிபரின் காரில் துப்பாக்கி சிக்கியது: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அண்ணா சாலை காயிதே மில்லத் கல்லூரி அருகே போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவல்லிக்கேணியில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். காரில் துப்பாக்கி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த துப்பாக்கியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், அது ‘ஏர்கன்’ என்றும் துப்பாக்கி இல்லை என்றும் தெரியவந்தது. சொகுசு காரில் வந்தவர் தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் தரணிகுமார் (48) என தெரியவந்தது. அதைதொடர்ந்து தொழிலதிபரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Tags : Businessman ,investigation , The businessman's car was found with a gun: police investigation
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...