மதுரை: ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடந்து 15 ஆண்டுகள் ஆகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தமிழகத்தில் வேறு இடங்களில் நடந்த அகழாய்வு பற்ற்றிய அறிக்கைகளின் நிலை என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.